|
ஒரு சமயம் தாவீது சோம்பலினிமித்தம் யுத்தத்திற்கு செல்லாது வீட்டில் இருந்தபடியால், பயங்கர வீழ்ச்சியடைந்து பாவம் செய்தான். அந்தப் பாவம் அவனுடைய மீதி வாழ்க்கை முழுவதற்கும்...... காலாகாலங்களாய் தங்கிவிட்ட “அடர்ந்த கருப்பு புள்ளியாகிவிட்டது!” (2சாமுவேல் 11:1-5). இருப்பினும் இந்த தோல்வியை, தேவன் அவனை உடைப்பதற்கும்..... 51-ம் சங்கீதத்தை எழுதும் அனுபவத்திற்கும் பயன்படுத்திவிட்டார்!! தாவீது எழுதிய வேறு எந்த சங்கீதத்தைக் காட்டிலும், இந்த 51-ம் சங்கீதம் லட்சக்கணக்கான பக்தர்களை ஆசீர்வதித்து விட்டதே! ஒரு சாதாரண பாவத்தில் தாவீது வீழ்ந்திருந்தால், இத்தனை அருமையான 51-ம் சங்கீதத்தை அவன் ஒருக்காலும் எழுதியிருக்கவே முடியாது! அவனுடைய தோல்வி அத்தனை அகோரமாயும், எல்லோரும் அறியும்படியாயும் இருந்தபடியால்தான்..... அவன் முற்றிலுமாய் தாழ்த்தப்பட்டு நொறுங்குண்டவனாய் மாறினான். ஆம், அவன் தன் மீதியான ஜீவகாலமெல்லாம் “ஓர் நொறுங்குண்ட மனிதனாகவே” நிலைத்திருந்தான்!
பாருங்கள், நம் அருமை இயேசுவும் தன்னை “தாவீதின் குமாரன்” என எத்தனை மகிழ்வுடன் சொல்லிக் கொண்டார்!
நாம் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளுமாய் மாற வேண்டுமென்றால், நாம் புறப்பட்டு பாவம் செய்யவேண்டும் என நான் கூறவில்லை! நிச்சயமாய் நான் அப்படிக்கூறவில்லை! ஆனால், நீங்கள் ஏற்கனவே பயங்கர வீழ்ச்சியடைந்தவர்களாய் இருந்தால், இனி உங்களுக்கு நம்பிக்கை இல்லை என எண்ணிடத் தேவையில்லை என்றே கூறுகிறேன். ஆம், நீங்களும் தேவனுக்கு உண்மையுள்ள ஊழியனாய் மாறிடமுடியும்!!
நம் ஜீவியகாலமெல்லாம் ஜெயம் பெற்று வாழும்படியே தேவன் நமக்கு கிருபையைத் தர வாஞ்சிக்கிறார். ஆனால் அவர் அந்த கிருபையைத் தாழ்மையுள்ளவர்களுக்கு மட்டுமே தருகிறார். அநேக சமயங்களில், நம்மைப் பாவத்தில் வீழ அனுமத்திப்பதையே, நம்மைத் தாழ்த்துவதற்குரிய வழியாய் தேவன் காண்கிறார். இது நிச்சயமாய் சிறந்த வழி இல்லைதான்! இயேசு ஒருபோதும் பாவத்தில் வீழ்ச்சியடையாமலே தாழ்மையுடன் இருந்தார். ஆனால் இவ்வாறு இயேசுவைப் போவவே இருப்பதற்கு பேதுருவாலும் தாவீதாலும் இன்னும் பல தேவமனிதர்களாலும் இயலவில்லை!
ஆனால், அற்புதமான காரியம் என்னவென்றால், இத்தனை மோசமாய் வீழ்ச்சியடைந்த தாவீதைக் கூட தேவன் பயன்படுத்துகிறார் என்பதேயாகும்! ஆனால், அவர்கள் தங்கள் தோல்விகளுக்காய் மனம் கசந்து அழுது மனந்திரும்பினால் அப்படியாகும்..... மற்றபடி அல்ல!!
ஆம், தாவீதுக்கு தேவன் என்ன செய்தாரோ, அதையே உங்களுக்கும் அவர் செய்திடுவார்!
|